பாசீர் மாஸ், டிச 5 – நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் 44 வயது மாற்றுத் திறனாளி ஒருவர் ஆடவர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
முகமது கமருதீன் முகமது யாஹ்யா என அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர் தனது வீட்டிற்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே வீசிய மீன் வலையை எடுப்பதற்கு தனியாகச் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காமா அசுரல் முகமது தெரிவித்தார்.
வலையை இழுத்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்து, வெளியேற முடியாமல் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
உயிரிழந்த ஆடவரின் சடலம் சவப் பரிசோதனைக்காகப் பாசீர் மாஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது, இச்சம்பவம் தீடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.