கோலாலம்பூர், நவ 23 – TRX எனப்படும் Tun Razak Exchange சுரங்கப் பாதை நவம்பர் 29ஆம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, 5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட அந்த சுரங்கப் பாதை திறக்கப்படுவதன் மூலம் கோலாலம்பூர் மாநகரில் 30 விழுக்காடு போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்டா லிங்கி தெரிவித்தார். ஜாலான் துன் ரசாக்கிற்கு நேரடியாக சென்றடையக்கூடிய TRX சுரங்கப் பாதை TRX ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கு எளிதாக சென்றடையும் சாலையாகவும் அமைந்துள்ளது. சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகனங்கள் நேரடியாக TRX வளாகத்தின் நிலத்தடிக்கு கீழே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்கு செல்ல முடியும் என அலெக்சாண்டர் நான்டா லிங்கி கூறினார்.