செர்டாங், டிசம்பர் 6 – சிலாங்கூர் ,செர்டாங், தாமான் செர்டாங் ஜெயாவிலுள்ள, வீடொன்று இன்று அதிகாலை தீக்கிரையானது.
அச்சம்பவத்தில், ஒரு கார், ஒரு வேன் உட்பட மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.
அச்சம்பவம் தொடர்பில், பின்னிரவு மணி 1.46 வாக்கில், சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை, அதன் துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.
தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், சம்பவ இடத்தை சென்றடைந்த போது, வரிசை வீடொன்று 45 விழுக்காடு தீக்கிரையாகி இருந்தது.
அதோடு அந்த தீயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாசா ரக கார் ஒன்றும், நிசான் ரக வேன் ஒன்றும் 95 விழுக்காடு சேதமடைந்த வேளை ; மோட்டார் சைக்கிள்கள் நூறு விழுக்காடு தீயில் அழிந்ததாக முக்லீஸ் சொன்னார்.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட வேளை ; தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.