Latestமலேசியா

ஆற்றோரத்தில் மனிதரின் சடலம்

பத்து பஹாட் , மார்ச் 25 – ஜோகூர், Paloh, Ladang Tereh Mill ஆற்றோரத்தில், போலீசார் நபர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

எந்தவொரு அடையாள ஆவணமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என , குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

ஆடவர் ஒருவர் மீன் பிடிக்க சென்றிருந்தபோது, ஆற்றுப் பகுதியிலிருந்து சுமார் 6 மீட்டர் தூரத்தில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தை திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியிருக்கின்றனர். மேலும், காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் உயிரிழந்த அந்த நபர் இடம்பெற்றுள்ளாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!