Latestமலேசியா

கைப்பேசி பயன்பாட்டை குறைக்க குடும்பத்தினரிடம் ஒப்பந்தம் போட்ட தாய்; மீறினால் விளைவு விபரீதம்

இந்தியா, ஜன 8 – சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதனின் தாக்கம் அதிகரித்துக் கொண்ட வருகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களுக்கு இடையிலான நெருக்கத்தை குறைத்து வருவதோடு குடும்ப உறவுகளையில் அருகில் இருந்தாலும் தொலைவில் வைத்து விடுகிறது.

இந்நிலையில் கைத்தொலைப்பேசிக்கு அடிமையான தனது குடும்பத்தினரை மீட்க இந்தியாவில் மஞ்சு குப்தா எனும் பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தனது கணவரும் குழந்தைகளும் கைத்தொலைப்பேசிக்கு அடிமையாவதை தவிர்க்க அவர் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி அதில் முக்கிய 3 அம்சங்களை இணைத்து அதில் குடும்ப உறுப்பினர்களைக் கையெழுத்திட செய்திருக்கிறார்.

அது என்ன முக்கிய 3 அம்சம் என்கிறீர்களா? முதல் அம்சம், காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தாமல் அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டுமாம். இரண்டாவதாக சாப்பாடு மேசையில் கைத்தொலைபேசியை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் கலந்து பேசியவாறு உணவு அருந்த வேண்டும். மூன்றாவது, குளியலறைக்குக் கைத்தொலைப்பேசியைக் கொண்டு செல்ல கூடாது என்ற மூன்று அம்சங்களே அந்த அக்ரீமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார் அப்பெண்.

அம்மா தானே ஏமாற்றி விடலாமே என்ற எண்ணம் வருகிறாதா? அதுதான் இல்லை. ஒரு ஒருவேளை ஒப்பந்தத்தை மீறினால், ஒரு மாதத்திற்கு ஆன்லைனில் உணவுகள் ஆர்டர் செய்ய தடையும் விதித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் நகல் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் மஞ்சு குப்தாவை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!