Latestமலேசியா

மான் தலையையும் இறைச்சியும் வைத்திருந்த ஆடவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

சிரம்பான், மார்ச் 13 – லைசென்ஸ் இன்றி மான் தலை மற்றும் அதன் இறைச்சியை வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

53 வயதுடைய முகமது ரோஸ்லி அமத் என்ற ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மஸ்னி நவி அபராதத் தொகையை விதித்தார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி முகமது ரோஸ்லிக்கு நிதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!