ஈப்போ , செப் 28 – ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் கீழ் இயங்கி வரும் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா ஆர். சீத்தாராமன் தலைமையில் நடைபெறுவதற்கு இணக்கம் காணப்பட்டது. மாநில அரசாங்க செயலகத்தில் இரு தரப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்களை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் இதனை தெரிவித்தார்.
அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழா எந்தவொரு தடங்கலும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக சிவநேசன் கேட்டுக்கொண்டார்.