Latestமலேசியா

இல்லாத மோசடி திட்டத்தில் வர்த்தகர் 688,300 ரிங்கிட் இழந்தார்

கோலாத் திரெங்கானு, பிக் 5 – இல்லாத மோசடி திட்டத்தில் வர்த்தகர் ஒருவர் 688,300 ரிங்கிட் இழந்திருப்பதாக திரங்கானு போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முகநூலில் வெளியான விளம்பரத்தினால் கவரப்பட்டு 50 வயதுடைய அந்த வர்த்தகர் பணத்தை இழந்தார். தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட செயலியில் அது தொடர்பான தகவலை பெற்ற கையோடு 12 வெவ்வேறு வங்கிக் கணக்கில் 19 முறை 688,300 ரிங்கிட்டை அவர் பட்டுவாடா செய்துள்ளார். அந்த முதலீட்டுக்கு ஜனவரி 24ஆம் தேதி 20 லட்சம் ரிங்கிட் ஆதாயம் கிடைக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த தொகையை மீட்பதற்கு முயன்றபோது மொத்த ஆதாயத்தில் மேலும் 1 விழுக்காடு பணத்தை செலுத்த வேண்டும் என அந்த வர்த்தகர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்த தொகையை செலுத்திய பின் இணையத்தளத்தில் ஊருடுவ அவர் முயன்றபோது தடுக்கப்பட்டதால் இது குறித்து கடந்த புதன்கிழமை அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என மஸ்லி மஸ்லான் கூறினார். ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை முதலீட்டில் பணம் இழந்தவர்கள் தொடர்பான 136 மோசடி புகார்களை திரெங்கானு வர்த்தக குற்றவியல் போலீசார் பெற்றதாகவும் அற்கு முந்தைய வாரத்தில் 115 புகார்கள் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!