கங்ஙார், பிப்ரவரி 15 – எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக, பெர்லீசில் வெப்பமான வானிலை நிலவியுள்ளதை அடுத்து, அங்குள்ள திமா தாசோ அணைக்கட்டிலுள்ள நீரை, இன்னும் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே, திமா தாசோ நீர்த்தேக்கம் இன்னும் நல்ல நிலையில் உள்ளதால், அப்பகுதியில், செயற்கை மழையை பொழிவிக்கவோ, நீரை விநியோகிக்கவோ இன்னும் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என பெர்லீஸ் ஆட்சிக்குழு உறுப்பினர் அசிசம் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இன்று வரை, அந்த அணைக்கட்டின் நீர்மட்டம், 28.57 மீட்டர் அல்லது இரண்டு கோடியே 55 லட்சம் கன மீட்டராக பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளை ; இன்னும் 84 விழுக்காட்டு நீர் கையிருப்பு உள்ளது.
அது வழக்கமாக பதிவுச் செய்யப்படும் 29.1 மீட்டரைக் காட்டிலும் குறைவாகும்.
அன்றாடம் அங்கு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் அடிப்படையில், திமா தாசோ அணைக்கட்டில் அன்றாடம் சராசரியாக 0.02 மீட்டர் நீர் குறைந்துள்ளதை அது காட்டுகிறது.
தற்சமயம், அந்த அணைக்கட்டிலுள்ள நீர், வீட்டு உபயோகத்திற்கும், நெற்பயிர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், கூடிய விரைவில் மழை பெய்யாமல், நீர் வழக்கமான அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தால், அணைக்கட்டின் நீர் கையிருப்பு 25.3 மீட்டர் வரையில் அபாயகரமான அளவுக்கு குறைய அதிக சாத்தியம் உள்ளதாக அசிசம் சொன்னார்.