வாஷிங்டன், மார்ச் 14 – இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜனநாயக கட்சியின் சார்ப்பில் போட்டியிடுவதற்கு போதுமான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கான ஆதரவை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
ஜார்ஜியா மாநிலத்தில் முன்னோடிச் சுற்ற முடிவில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஜனநாயக கட்சியின் ஒட்டுமொத்த 3,934 பேராளர்களில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தகுதி பெறுவதற்கான 1,968 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.