புத்ரா ஜெயா, நவ 19 – T.B எனப்படும் காசநோய் நாட்டில் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் பதட்டம் அடைய வேண்டியதில்லையென சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார் . கோலாலம்பூரில் செராஸ் வட்டாரத்தில் சிலருக்கு காசநோய் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய டாக்டர் ஸாலிஹா, நிலைமையை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவு கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். எனினும் இந்நோய் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றார். இத்தகைய தவறான தகவலால் பொதுமக்கள் பதட்டம் அடையும் சூழ்நிலை இருப்பதாக டாக்டர் ஸாலிஹா சுட்டிக்காட்டினார். காச நோய் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே பரவியுள்ளது. இந்நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகேயுள்ள கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
Related Articles
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி
3 hours ago
“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்
3 hours ago
Check Also
Close