
கோலாலம்பூர், டிச 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை அறிவிப்பு இன்று இரவு மணி 8.15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மாலை 5 மணியளவில் டத்தோஸ்ரீ அன்வார் நடத்தவிருந்த செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அமைச்சரவை அறிவிப்பு தொடர்பான தகவல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் . புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் டிசம்பர் 5ஆம்தேதி திங்கட்கிழமை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அன்வார் தெரிவித்தார். சிக்கனத்தோடு அமைச்சரவையை எப்படி நிர்வகிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.