Latestமலேசியா

இபிஎப் சந்தாதாரர்கள் ஏப்ரல் 7 தொடங்கி வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், ஏப் 3 – இபிஎப் ( EPF ) ஊழியர் சேம நிதியை உத்தரவாதமாக வைத்து சந்தாதாரர்கள் , ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி வங்கியிலிருந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் கணக்கில் குறைந்தபட்சம் 3,000 ரிங்கிட் சேமிப்பு பணத்தை வைத்திருக்கும் 40-லிருந்து 50 வயதுடைய சந்தாதாரர்கள் அந்த விண்ணப்பத்தை செய்ய முடியுமென EPF தெரிவித்தது.

இரண்டாம் கணக்கில் உள்ள தொகையைப் பொருத்து 50,000 ரிங்கிட் வரை சந்தாதாரர் வங்கியிலிருந்து தனிநபர் கடனைப் பெற முடியும்.
தற்போதைக்கு BSN- Bank Simpanan Nasional வங்கியும், MBSB வங்கியும் , 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு வரையிலான குறைந்த வட்டியில் இந்த கடன் வசதியை வழங்கவிருக்கிறது.

இதனிடையே, 40 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்கள் வங்கியிலிருந்து கடன் பெறும் இரண்டாம் கட்ட வசதி குறித்து, விரைவில் அறிவிக்கப்படுமென EPF தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!