ஈப்போ, மார்ச் 20 – பேராக், ஈப்போ, குவாலா கங்சார் சாலையிலுள்ள, ஹோவிட் (Hovid) மருந்து மற்றும் சுகாதார பராமரிப்பு தொழிற்சாலை தீக்கிரையானது.
நேற்றிரவு மணி 10.25 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, மாநில தீயணைப்பு மீட்ப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈப்போ, சிப்பாங் பூலாய், பாசிர் பூத்தே தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 51 தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்க விரைந்தனர்.
எனினும், அந்த தொழிற்சாலை 80 விழுக்காடு தீக்கிரையானதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் இருந்த குளோரின், ஆல்கஹால் போன்ற இரசாயனங்கள் கசிவால் தீ ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதிகாலை மணி இரண்டு வாக்கில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோடு, இரசாயன கசிவு ஏற்பட்டிருந்த பகுதிகள் பாதுகாப்பான பகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டது.