புதுடெல்லி, டிசம்பர் 29 – யூடியூப்பில் பாடல் கேட்க வேண்டும் என்பதற்காக, மனைவியின் கைப்பேசியை கேட்ட கணவரின் கண்ணை, பெண் ஒருவர் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம், பாக்பத் மாவட்டத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பாடல் கேட்க வேண்டும் என்பதற்காக, சம்பந்தப்பட்ட ஆடவர் தனது மனைவியின் கைப்பேசியை தருமாறு கேட்டுள்ளார்.
அதனால், அவர்களுக்கு இடையில் சண்டை மூண்ட வேளை ; சினமடைந்த மனைவி கத்தரிக்கோலை எடுத்து கணவரின் கண்ணை குத்தியுள்ளார்.
எனினும், அச்சம்பவத்தை உணர்ந்த குடும்பத்தார், அவ்வாடவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிகிச்சைக்கு பின்னர் அவ்வாடவர் செய்த புகாரை தொடர்ந்து, போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.