கோலாலம்பூர், நவம்பர் 16 – கடந்த சில நாட்களாக, சாலை ஒன்று, “இருட்டில் ஒளிர்வதை” காட்டும் புகைப்படங்கள் சில வைரலாகியுள்ளன.
சிலாங்கூர், செமெஞ்ஞேவிலுள்ள, ஜாலான் சுங்கை லாலாங் சாலை தான் அது.
நாட்டில் இதுவரை, “இருட்டில் ஒளிரும்” வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதல் சாலை அதுவாகும்.
பொதுப் பணி அமைச்சின் கீழ், இருட்டில் ஒளிரும் சாலையை அமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் மாவட்ட பொதுப்பணித் துறையாக, ஹுலு லங்காட் நிகழ்கிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கும் ஜாலான் சுங்கை லாங்காட் சாலையின் புகைப்படங்கள், இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளதோடு, நேர்மறையான கருத்துகளும் குவிந்து வருகின்றன.