Latestசிங்கப்பூர்மலேசியா
போலி மலேசிய கடப்பிதழை பயன்படுத்திய சிங்கப்பூரியருக்கு 20 வார சிறை தண்டனை
தான் சிங்கப்பூரின் போலீசாரால் தேடப்படுபவர் என நினைத்து மலேசியாவிற்கு வந்து மலேசிய போலி கடப்பிதழை பயன்படுத்தி அந்நாட்டிற்கு சென்ற 58 வயது ஆடவருக்கு அந்நாடு நீதிமன்றம் 20 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஒரு குண்டர் கும்பல் பிரச்சனை தொடர்பாக தாம் போலிசாரால் தேடுப்படுவதாக நினைத்துக் கொண்ட ஆண்ட்ரூ லு எங் லியோங் 2008 மற்றும் 2009ல் அவ்வாறு போலி கடப்பிதழை கொண்டு சிங்கப்பூருக்குள் சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு நேற்று சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.