Latestமலேசியா

சிலாங்கூர் மந்திரி பெசார் வாகனத்திற்கு; MBSJ அபராதம்

கோலாலம்பூர், ஜனவரி 18 – இம்மாதம் நான்காம் தேதி, தனது வாகனத்திற்கு, MBSJ – சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அபராதம் விதித்ததை, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த அபராத அறிக்கையை தனது X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள அமிருடின், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அந்த 80 ரிங்கிட் அபராதத்தை, தாம் செலுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“திடீரென போக்குவரத்து அபராதம் குறித்து @SJcitycouncil இடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்தது. எனினும், அந்த இணைப்பை கிளிக் செய்த ஐந்து நிமிடங்களில், கட்டணத்தை செலுத்த முடிந்தது” என அமிருடின் பதிவிட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய அனைத்து ஊராட்சிமன்றங்களும், “ஸ்மார்ட் பார்க்கிங்” முறையையும், “ஆன்லைன்” கட்டண முறையையும் அமல்படுத்தி வருகின்றன எனவும் அமிருடின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான அபராதங்களை உடனடியாக செலுத்திவிடுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!