Latestமலேசியா

எலியின் எச்சங்கள் இருந்தன; பினாங்கில் மூன்று உணவகங்கள் மூடப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, ஜன 18 – சமையலுக்கான மூலப் பொருட்களை வைக்கும் இடத்தில் எலியின் எச்சங்கள் இருந்ததைத் தொடர்ந்து ஜோர்ஜ் டவுனில் உள்ள மூன்று உணவகங்களை பினாங்கு தீவு மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மூடினர். ஜனவரி 30 ஆம் தேதிவரை அந்த மூன்று உணவகங்களும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பினாங்கு தீவு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. சமையலுக்கான மூலப் பொருட்கள் வைக்கப்பட்ட இடத்தில் எலியின் சிறுநீரக கசிவும் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த மூன்று உணவகங்களின் தூய்மையும் அதிருப்தியளிக்கும் வகையில் இருந்துள்ளன.

அமலாக்க அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்ட 5 உணவகங்களில் மூடுவதற்கு உத்தரவிடப்பட்ட அந்த மூன்று உணவகங்களும் அடங்கும். அந்த ஐந்து உணவகங்களுமே தூய்மையை பேணத் தவறியிருந்தன. உடனடியாக அந்த அனைத்து உணவகங்களுக்கும் குற்றப் பதிவு வழங்கப்பட்டது. அனைத்து உணவகங்களும் தங்களது சமையல் அறைகளில் தூய்மை மற்றும் சுத்தத்திற்கான நடைமுறையை பின்பற்றும்படி பினாங்கு தீவு மாநாகர் மன்றம் கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!