Latestமலேசியா

ஈப்போவில் பொது லாட்டரி சூதாட்ட கும்பல் முறியடிப்பு; 4 பேர் கைது

ஈப்போ, ஏப்ரல்-28, ஈப்போவில், ஒரு பெண் உட்பட 4 பேர் கைதானதை அடுத்து, உரிமம் இல்லாமல் பொது லாட்டரி சீட்டு விற்று வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது.

லாட்டரி விற்பனையில் கிடைக்கும் பணத்தை எண்ணும் இடமாக செயல்பட்டு வந்த 3 மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவர்கள் சிக்கினர்.

அப்படி மொத்தமாகக் கிடைத்த பணம் மாதத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

கைதானவர்கள் 50 முதல் 70 வயதிலானவர்கள் என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

அம்மையங்கள் அனைத்தும், சட்டவிரோத லாட்டரி சீட்டு ஏற்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்புடைய சூதாட்ட ஏஜெண்டுகளின் பின்னணியில் இயங்கி வந்துள்ளன.

‘Mushroom’ என அழைக்கப்படும் அக்கும்பல் 2020 முதலே செயல்பட்டு வந்துள்ளதாக, நூர் ஹிசாம் சொன்னார்.

மேலும் சில ஏஜெண்டுகள், துணை ஏஜெண்டுகள், ‘mushroom’ லாட்டரி ஏற்பாட்டாளர்கள் ஆகியோரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.

அவர்களையும் கைதுச் செய்து அக்கும்பலை முழுவதுமாக முறியடிப்போம் என, நூர் ஹிசாம் கூறினார்.

இச்சம்பவம், அதிகபட்சம் 200,000 ரிங்கிட் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கொண்டு வரக்கூடிய 1953-ஆம் ஆண்டு பொதுவெளி சூதாட்ட சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!