Latestமலேசியா

படகு துறையில் கீழே விழுந்த சிறுவனின் உடல் ஆற்றில் கண்டுப்பிடிப்பு

குவந்தான், டிச 14 – ரொம்பினில் குவாலா ரொம்பின் பஞ்சீர் சிம்பாங் செபாயாங் வீடமைப்பு பகுதிக்கு அருகே திங்கட்கிழமை படகுத்துறைப் பகுதியில் விழுந்தது முதல் காணாமல்போனதாக கூறப்பட்ட 5 வயது சிறுவனின் உடல் நேற்று ரொம்பின் ஆற்றில் மீட்கப்பட்டது. ரிஸ்க் ரமாதினா ஜமாலுடின் என்ற அந்த சிறுவன் விழுந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் தேடும் மற்றும் மீட்கும் குழுவினர் அவனது உடலை கண்டுப்பிடித்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் DSP அஸ்ஹரி முக்தார் தெரிவித்தார்.

தனது வீட்டிற்கு அருகேயுள்ள படகுத்துறைக்கு அருகே திங்கட்கிழமை மாலை மணி 5.25 அளவில் தனது இதர மூன்று சகோதரர்களுடன் சிறுவன் ரிஸ்க் ரமாதினா மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நீரில் விழுந்ததாக போலீசிற்கு தகவல் கிடைத்ததாக ஸ்ஹரி முக்தார் கூறினார். போலீஸ், தீயணைப்பு மீட்புத்துறை உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 116 அதிகாரிகளுடன் கிராம மக்களும் தேடும் மற்றும் மீட்புக்குழுவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!