கோத்தா திங்கி, மார்ச் 13 – கோத்தா திங்கியில் ஜாலான் மாவாய் – தஞ்சோங் செதிலியில் 12.5ஆவது கிலோமீட்டரில் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில் 38 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார் என கோத்தா திங்கி OCPD ஹுசைன் ஜமோரா தெரிவித்தார்.
29 வயதுடைய பெண்மணி மற்றும் 24ஆம் வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற கார்களும் பாதுகாவலர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டன.
தலையில் கடுமையாக காயம் அடைந்த அந்த பாதுகாவலர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். அந்த விபத்தில் இரண்டு கார் ஓட்டுனர்களும் காயம் அடையவில்லை.