Latestசிங்கப்பூர்
முக்கவசம் அணிவது கட்டாயமில்லை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சு
சிங்கப்பூர், டிச 23 – சிங்கப்பூரில் தற்போது கோவிட் 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை அவசியமில்லை என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்போது விடுமுறை மற்றும் பண்டிகைக் காலம் என்பதால், தற்போது இருக்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிங்கப்பூரில் 10,000 படுக்கைகள் கோவிட் தொற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இப்போது 600 முதல் 700 வரையிலான படுக்கைகள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறப்பட்டுள்ளனர். இருப்பினும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நிலைமை இன்னும் சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.