Latestமலேசியா

இஸ்ரேல் கொடியை பறக்கவிட்டார் ஆடவருக்கு ஆறு மாதம் சிறை – அபராதம்

கோலாலம்பூர், நவ 30 – மாராங்கில் ஒரு கடைக்கு முன்புறம் இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட ஹர்மா சுல்பிகா டெராமன் என்ற ஆடவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை மற்றும் 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் மாராங் புக்கிட் பாயுங்கில் வாகன உபரி பாகங்களை விற்கும் கடைக்கு முன்னதாக இஸ்ரேல் கொடியை பறக்க விட்டதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். மாஜிஸ்திரேட் சூர் அசுரின் ஸைனால்கிஃப்லி முன்னிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 30 வயதுடைய ஹர்மா ஒப்புக் கொண்டார். இதனிடையே 500 ரிங்கிட் அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதத்திற்கு சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி ஹர்மாவுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!