Latestமலேசியா

கார் ஓட்டுனர் கொலை உணவு விநியோகிக்கும் சேவையில் ஈடுபட்டுவரும் ஐவர் மீது குற்றச்சாட்டு

பாங்கி. பிப் 27 – காஜாங் ,  Taman  Pelangi  Semenyih  2-இல்   கடந்த வாரம்  ஏற்பட்ட ஒரு விபத்தில் சம்பந்தப்பட்ட  கார்  ஓட்டுனர்  ஒருவர் மரணம் அடையும்வரை  தாக்கியதாக  ஐந்து தனிப்பட்ட நபர்கள் மீது  பண்டார் பாரு பாங்கியிலுள்ள  மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.  Majistret Nurdiyanah Mohd Nawawi.  முன்னிலையில்  குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது  அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக  41 வயதுடைய    Mohd Yureee Ranoff, 34  வயதுடைய Azharul Azuan Mohd Azan,  22 வயதுடைய    Tengku Izham Tengku Hamid,  43  வயதுடைய Mahazir Nordin,  40 வயதுடைய Syamdul Qamar Ayob ஆகிய   ஐவரும்   தலையசைத்தனர்.   கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருப்பதால்  குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!