Latestமலேசியா

தீபகற்ப மலேசியாவில், அடுத்த 7 நாட்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – இன்று தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு, தீபகற்ப மலேசியாவிலும், சபாவிலும், 35 பாகை செல்சியசுடன் கூடிய வெப்பமான வானிலை நீடிக்குமென, மெட் மலேசியா – வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

குறிப்பாக, தீபகற்ப மலேசியாவிலுள்ள, பெரும்பாலான மாநிலங்களில், அடுத்த ஏழு நாட்களுக்கு வெப்பம் மற்றும் வறண்ட வானிலை பதிவுச் செய்யப்படுமென கூறப்படுகிறது.

சபாவிலுள்ள உட்புறப்பகுதிகள் உட்பட, மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டகான், குடாட் மற்றும் லபுவான் ஆகியப் பகுதிகளிலும் அதே வானிலை பதிவாகும்.

மாறாக, சரவாக்கில், ஈரமான வானிலையுடன், இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் வேலை, பலத்த காற்று வீசுமென கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்த வானிலை, கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமன், கபிட், பிந்துலு, பெதோங் மற்றும் சிபு ஆகிய பகுதிகளில், மாலை தொடங்கி அதிகாலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

குறைந்தபட்ச மழை பொழிவு பதிவானால், வெப்பமான வானிலை எச்சரிக்கையை கணிக்க முடியுமென, வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!