Latestமலேசியா

நாள் ஒன்றுக்கு 900,000 பயணிகளை கவர ரேபிட் ரேல் நிறுவனம் இலக்கு

சுபாங் ஜெயா, பிப்ரவரி 29 – நாட்டிலுள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை 40 விழுக்காடாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை பூர்த்தி செய்யும் கடப்பாட்டை ரேபிட் ரேல் நிறுவனம் கொண்டுள்ளது.

குறிப்பாக, இலகு இரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக அந்த இலக்கை அடைய முடியுமென அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

அதனால், இவ்வாண்டு நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் பயணிகளை கவர இலக்கிடப்பட்டுள்ளதாக, ரேபிட் ரேல் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அமிர் ஹம்டான் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு நெடுகிலும், நாள் ஒன்றுக்கு மொத்தம் ஏழு லட்சத்து 41 ஆயிரத்து 259 பயணிகள் LRT, MRT, Monorel சேவைகளை பயன்படுத்தியதாக அமிர் சொன்னார்.

இவ்வாண்டு, இரயில் பெட்டிகளின் கொள்ளலவை அதிகரிப்பது, இரயில் சேவை நேரத்தின் இடைவெளியை குறைப்பது உட்பட மேலும் சில புதிய அணுகுமுறைகள் வாயிலாக அந்த எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சத்து நான்காயிரம் பேராக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை அமிர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!