Latestமலேசியா

உணவகத்தில் கார் மோதியதால், பெண்ணின் காலைப் பசியாறையே அவரின் கடைசி உணவான சோகம்

சுங்கை பட்டாணி, ஏப்ரல்-28, இன்று காலை கெடா, சுங்கை பட்டாணி, ஜாலான் தாமான் பெர்சாத்து அருகே ஓர் உணவகத்தில் கார் மோதியதை அடுத்து, 55 வயது மாதுவின் காலைப் பசியாறையே அவரின் கடைசி உணவாக மாறியது.

காலை 9 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், பினாங்கின் கெலுகோரைச் சேர்ந்த ஹான் ச்சின் டிங் (Han Chin Ting) என்ற வர்த்தகரே உயிரிழந்தார்.

பசியாறிக் கொண்டிருந்த போது, Perodua Alza காரொன்று கடை வளாகத்திற்குள் நுழைந்து அவரை மோதியது.

Perodua Alza காரோட்டுநரான 68 வயது நபர் ஜாலான் தாமான் பெர்சாத்துவில் உள்ள முச்சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இலேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி உணவகத்தில் நுழைந்து, பாதிக்கப்பட்டவர் மீது மோதியதாக, குவாலா மூடா போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் கூறினார்.

கைகள், கால்கள், முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அதே சமயம் காரோட்டுநருக்கு நெஞ்சு மற்றும் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தானதாகவோ வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதோடு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி நீக்கம் செய்யப்படலாமென்பதும் குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!