
சிப்பாங், மார்ச் 17 – Glomac Cyberjaya வில் உணவகம் ஒன்றில் அதன் ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறைத் தொடந்து அவர்களை தாக்கியதில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த தகராறின்போது உணவகத்தின் இரண்டு ஊழியர்கள் தலை மற்றும் தோளில் காயம் அடைந்தனர். அதோடு அங்கிருந்த உணவு உட்கொள்ளும் தட்டுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தியதில் 51 மற்றும் 50 வயதுடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் ஓ.சி.பி.டி துணை கமிஷனர் Wan Kamarul Azran தெரிவித்தார்.