Latestமலேசியா

காலஞ்சென்ற துன் அப்துல் தாய்ப் நல்லுடல்; அரசாங்க மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும்

காலஞ்சென்ற சரவா  முன்னாள் ஆளுநரும்  முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாய்ப் மாஹ்முட்டின்  நல்லுடல்  முழு அரசாங்க மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும்.   அவரது நல்லுடல் மாநில சட்டமன்ற  கட்டிடத்திற்கு   கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து  இன்று காலை  8 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  காலை  11.30 மணிவரை நடைபெறும்   பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு  துன் அப்துல் தாய்ப் மாஹ்முட்டின்  வீட்டிற்கு அருகேயுள்ள   Demak Mosque  பள்ளிவாசலில்  அவரது நல்லுடல்   சிறப்பு தொழுக்கைக்காக கொண்டுச் செல்லப்படும்.  டெமாக் ஜெயாவிலுள்ள குடும்ப மையத்துக் கொல்லையில்  அப்துல் தாய்ப் மாஹ்முட்டின்  நல்லடக்க சடங்கு நடைபெறும்.  சரவாக்கின் நவீன  மேம்பாட்டு தந்தை என வர்ணிக்கப்படும்  அப்துல் தாய்ப் நேற்று அதிகாலை மணி    4.40 அளவில்   கோலாலம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!