Latestமலேசியா

சிறந்த சேவையை வழங்குவேன் துணையமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோ ரமணன் உறுதி

கோலாலம்பூர், டிச 12 – தம் மீது நம்பிக்கை வைத்து தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறையின் துணையமைச்சராக நியமித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சிறந்த சேவையை வழங்குவதற்கு உறுதியளித்திருக்கின்றார் .

துணையமைச்சராக தாம் நியமிக்கப்பட்டது, தமக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றும் ரமணன் கூறினார். தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறையின் துணையமைச்சர் என்ற முறையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

விரைவில் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கை சந்தித்து அவரது கருத்துக்களையும் ஆலோசனையும் பெறவிருப்பதாகவும் ரமணன் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்காக நாம் அனைவரும் சேர்ந்த ஒரு குழுவாக உழைப்போம் என மித்ரா சிறப்பு செயற்குழுவின் தலைவரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமாக டத்தோ ரமணன் வெளியிட்ட தெரிவித்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!