Latestமலேசியா

Padu முதன்மை தரவு தளத்தில் முழுமையற்ற விவரங்களை இன்னமும் சேர்க்க முடியும்

கோலாலம்பூர், ஏப் 2 – Padu முதன்மை தரவு தளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம்தேதியோடு முடிவடைந்த போதிலும் முழுமையற்ற தகவல்களின் ஆகக்கடைசி விவரங்களை இன்னமும் பூர்த்தி செய்யமுடியும் என அரசாங்க தலைமை புள்ளி விவர அதிகாரி Mohd Uzir Mahidin தெரிவித்திருக்கிறார். சில தகவல்களை Padu தரவு தளத்தில் சேர்க்க தவறியோர் குறிப்பாக அடையாளக் கார்டு , e -KYC போன்ற தகவல்களை தொடர்ந்து வழங்கலாம். இத்தகையோருக்கு Padu குழுவின் அதிகாரிகள் உதவி செய்வார்கள்.

முழுமையான தகவல்கள் Padu தரவு தளத்தில் இடம் பெறச் செய்வதை இதன்வழி உறுதிப்படுத்த முடியும் என Mohd Uzir தெரிவித்தார். இதுவரை Padu வில் பதியாவதர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைத்தான் முடிந்துவிட்டது. ஆனால் ஜனவரி 2 ஆம் தேதிக்கும் மார்ச் 31ஆம் தேதிக்குமிடையே நடைபெற்ற Padu தரவு தளத்திற்கான பதிவு நடவடிக்கையின்போது பதிவு செய்தவர்களின் விடுபட்ட தகவல்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!