Latestமலேசியா

மை ஸ்கில் களும்பாங் மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு

கோலாலம்பூர், டிச 12 – இம்மாதம் 24-ஆம் தேதி காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.00 வரை Myskills Kelumpang மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

இக்கருத்தரங்கில் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்த கருத்தரங்கு மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான பேரியக்கம், பேரா மாநில பெரியார் பாசறை,பெரியார் நற்பணி மன்றம், மலேசிய தமிழ் நெறிக் கழகம் ஆகிய பதிவு பெற்ற அரசு சாரா இயங்கங்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் சொற்பொழிவாற்றுவதற்கு தமிழகத்தின் திராவிடர் கழகத்திலிருந்து மதிவதினி , தமிழகத்தின் பெண்ணிய இயக்கத்திலிருந்து திலகவதி, தமிழ் நாட்டின் இயற்கை பாதுகாப்புக்கான அகத்தி இயக்கத்திலிருந்து பாரதி கண்ணன், அப்பேத்கர் வாசிப்பு வட்டத்திலிருந்து கணேஷ், அமெரிக்காவின் பன்னான்டு பெரியாரிக்கத்திலிருந்து அமரன் ஆகியோரும் வருகை புரியவிருக்கின்றனர்.

இந்த கருத்தரங்கு தொடர்பான மேல் விவரங்கள் 016- 59100564 / 012-4341474 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!