
பினாங்கு ஜூன் 5 – கோவிட்-19 தொற்றுநோயின் மோசமான விளைவுகளிலிருந்து மலேசியா மீண்டுவரும் இவ்வேளையில் , நாட்டில் உள்நாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண சம்பளத்தை உயர்த்தும்படி முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் அறைகூவல் விடுத்தார்.
பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான உற்பத்தி, தோட்டங்கள் மற்றும் சேவை துறைகளில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை நாடு எதிர்க்கொள்வதை அவர் சுட்டிக்காட்டினார். வாழ்க்கை செலவீனங்கள் அதிகரித்து வருவதால் சம்பளத்தை சற்று அதிகமாக வழங்கினால்தான் உள்நாட்டு தொழிலாளர்கள் அண்டை நாடான சிங்கப்பூருக்கு செல்வதை தவிர்க்க முடியும் என சிவக்குமார் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 800,000 வேலைகள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது
உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமான RM1,500 ஐ சம்பளத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊதியத்தை உயர்த்துவதுதான் என்ற கருத்தை மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்கிறது. மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, இப்போது 18 லட்சம் ஆற்றல் மிக்க மலேசியர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள்,. அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான சிங்கப்பூரில் வேலை செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே இரு தினங்களாக பினாங்கு பட்டர் வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி மையம் வேலை தேடும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது