Latestஉலகம்

எக்குவாடோர்,பெருவில் வலுவான நிலநடுக்கம் ; 12 பேர் பலி

குயிட்டோ, மார்ச் 19 – எக்குவாடோர் ( Ecuador) கடற்கரை பகுதியையும், பெருவின் (Peru ) வடப் பகுதியையும் வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

66 கிலோமீட்டர் ஆழத்திற்கு 6. 8 Magnitude – ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதி அடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். மேலும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கார்களும் நொறுங்கின.

இந்தப் பேரிடரை அடுத்து, மக்களுக்கு உதவ மீட்புக் குழுவினர் விரைந்திருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!