அலோஸ்டார், பிப் 1 – குவாலா நெராங்கிற்கு அருகே ஜாலான் ஃபெல்டா லுபுக் மெர்பாவிலுள்ள ஒரு வீட்டில், சலவை இயந்திரத்தில் சிக்கிய நான்கு வயது சிறுமியை கெடா தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை மணி 3.53 அளவில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு குவாலா நெராங் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக குவாலா நெராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர்முகமட் அமினுதீன் மட் கோசாலி தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி குழந்தையை அந்த இயந்திரத்தின் உலரவைக்கும் பிரிவிலிருந்து வெளியே மீட்டனர். காயம் ஏதும் ஏற்படாத அந்த சிறுமி பத்திரமாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.