
ஷா அலாம், ஏப் 29 – ( SKVE ) எனப்படும் தென் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை மேம்பாலத்தின் எதிர்பாதையில் நுழைந்து கவனக் குறைவாக சென்ற டிரெய்லர் ஓட்டுனரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான அந்த சம்பவம் ஏப்ரல் 23 ஆம்தேதி பிற்பகல் 2 மணிக்கு நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் Superintendan முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி ( Mohd Akmalrizal Radzi ) தெரிவித்தார்.
SKVE நெடுஞ்சாலையில் Pulau Indah பாலத்தில் பச்சை நிற வால்வோ டிரெய்லரின் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைக் காட்டும் 33 வினாடி வீனாடியைக் கொண்ட காணொளியை போலீசார் கண்டறிந்தனர்.
இந்த சம்பவத்தில், போர்ட் கிள்ளான் வெஸ்ட்போர்ட்டிலிருந்து காஜாங் நோக்கி சென்றுக் கொண்டிருந்த டிரெய்லர் ஓட்டுனர் , அவருக்கு முன்னால் சென்ற மற்றொரு டிரெய்லரை முந்திச் சென்றார். பாலத்தில் இரட்டைப் பாதைகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனால் எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் விபத்துகளைத் தவிர்க்க சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டிரெய்லர் ஓட்டுநர் கோலா லங்காட் மாவட்ட காவல் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளார் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Akmalrizal தெரிவித்தார்.
அந்த டிரெய்லர் ஓட்டுநரான 30 வயதுடைய ஆடவர் போர்ட் கிள்ளானிலுள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்கிறார்