
கோலாலம்பூர், ஆக 7 – கோடிஸ்வரர் Elon Musk தம்மை தொடர்பு கொண்டு சந்திப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தம்மை தொடர்புகொண்ட Elon Musk தமது வாழ்க்கை வரலாறு மற்றும் பயணத்தை தொடர்வதாகவும் தெரிவித்ததாக அன்வார் கூறினார். Tesla, Starlin மற்றும் Spacex நிறுவனங்களை மலேசியாவிற்கு கொண்டுவருதற்கான தமது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தினர் என Madani சொற்பொழிவு கூட்டத்தில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார். Tesla அல்லது Starlink இணையச் சேவை மக்களுக்குத்தான் தேவைப்படுகிறது. Seri Perdana வில் இணையச் சேவை வசதி இருப்பதால் தமக்கு அது தேவைப்படாது என்று கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.