Latestஇந்தியாஉலகம்

ஏழ்மை துடைத்தொழிப்பில் உலகம் கவனம் செலுத்த வேண்டும் – இந்தியா அறைகூவல்

புதுடில்லி, மார்ச் 16 -Ukraine மீதான ரஷ்யாவின் படையெடுப்பு  உலகில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதால்   உலகளாவிய நிலையினான  ஏழ்மை நிலையை துடைத்தொழிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது.

G20  இயக்கத்தின்  உச்சநிலை கூட்டத்திற்கான இந்தியாவின்  உயர் அதிகாரியும் முக்கிய பேச்சாளருமான    Amitabh Kant  இதனைத் தெரிவித்துள்ளார்.  கடந்த மூன்று வாரங்களில் அடுத்தடுத்து  G20  இயக்கத்தின்    இரண்டு  அமைச்சர் நிலை கூட்டங்கள்  புதுடில்லியில்  நடத்தப்பட்டதைத் தொடர்ந்து  Amitabh Kant  இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு    G20 அமைப்பின் தலைவர் பொறுப்பை  ஏற்றுள்ள இந்தியா, உலக நெருக்கடியின்  தாக்கத்தினால்  பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!