Latestமலேசியா

தனது கடப்பிதழை திரும்ப பெற உயர் நீதிமன்ற உத்தரவை பெறும் முயற்சியில் டைய்ம் மனைவி

கோலாலம்பூர், பிப் 17 – தமது சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்தும் வழக்கு முடிவுறும் வரை கடப்பிதழ் முடக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீண்டும் பெறுவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் துன் டைய்ம் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலித் மனு செய்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை அந்த மனு தாக்கல் செய்யப்பட்டதை நயிமாவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் உறுதிப்படுத்தினார். அந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் திட்கட்கிழமை பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற எம்.ஏ.சி.சி-யின் நோட்டிஸை பின்பற்றத் தவறியதற்காக நயிமாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜாமின் நிபந்தனைகளில் ஒன்றாக அவரது கடப்பிதழை ஒப்படைக்கும்படி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!