Latestமலேசியா

சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் அதிரடி மாற்றங்கள்

ஷா அலாம் , ஜன 16 – சிலாங்கூரிலுள்ள மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என மாநில போலீஸ் தலைவரான டத்தோ உசேன் ஒமர் கான் கோடி காட்டியுள்ளார். பிரச்சனைக்குரிய அம்பாங் ஜெயா, தென் கிள்ளான் மற்றும் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் உயர் அதிகாரிகள் நிலையில் பெரிய அளவில் சீரமைப்பு செய்யப்படலாம் என அவர் கூறியுள்ளார். சில மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் முரட்டுத்தனமாக செயல்படும் போலீஸ்காரர்கள் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டு வருவதாகவும் அதற்கு தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாக உசேன் தெரிவித்தார். நாங்கள் பெரிய அளவில் சீரமைப்பு செய்வோம் . அல்லது உயர் அதிகாரிகள் மாற்றப்படலம் என அவர் கூறினார்.

போலீஸ் படையின் நற்பெயரை கெடுப்பதில் குறைந்த எண்ணிக்கையில் சிலர் இருந்து வருகின்றனர். அவர்களை களையெடுக்க வேண்டியிருப்பதால் இந்த விவகாரத்தில் இணக்கப் போக்கு அல்லது சமரசத்திற்கு இடமில்லையென உசேன் கூறினார். இதனிடையே கடந்த வாரம் வெளிநாட்டு கல்லூரி மாணவியை கற்பழித்தது மற்றும் அவரது நண்பரான மாணவரிடம் கொள்ளையிட்டதன் தொடர்பில் அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்றும் உசேன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!