
கோலாலம்பூர், ஏப்ரல் -29, ஜாலான் கெப்போங் மற்றும் ஜாலான் டாங் வாங்கியில் சாலை விதிமீறல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில், ஏப்ரல் 25-ஆம் தேதி Ops Halang சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, போலீஸ் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து அந்த அதிரடிச் சோதனையை நடத்தின.
கோலாலம்பூரின் முக்கிய இடங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், 21 வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்ட வேளை, 9 வாகனங்கள் tow செய்து இழுத்துச் செல்லப்பட்டன.
பொது இடங்களை மறைத்துக்கொண்ட வணிகத் தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தகைய 6 கடைகளுக்கு அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டு, மேலும் 3 கடைகளில் வியாபாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸும் JPJ-வும் தனியாக 34 அபராத நோட்டீஸ்களை வெளியிட்டன.