தோக்யோ, மார்ச் 20 – தென் கொரிய கொடியுடன் பயணம் செய்த ரசாயனத்தை ஏற்றியிருந்த கொள்கலன் கப்பல் ஒன்று ஜப்பானிய கடல் பகுதிக்கு வெளியே மூழ்கியதில் ஐந்து நபர்கள் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. கடுமையான கடல் கொந்தளிப்பு மற்றும் அலையினால் அந்த கப்பல் மூழ்கியதாக கூறப்பட்டது. அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் தென் கொரிய ஊழியர்களில் இருவர், எட்டு இந்தோனேசியர்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் இதுவரை பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.
காணாமல்போன ஐவரை கடலோர பாதுகாவலர்கள் இன்னமும் தேடி வருகின்றனர் . Akrilik அமில ரசாயனத்தை அந்த கொள்கலன் கப்பல் ஏற்றிச் சென்றதாகவும் கடலில் சென்றுகொண்டிருந்தபோது அந்த கொள்கலனில் கசிவு ஏற்பட்டதா என்ற தகவல் எதுவும் தெரியவில்லையென AFP செய்தி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட கொள்கலன் கப்பல் ஊழியர்கள் மருத்தவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.