கோலாலம்பூர். டிச 26 – இன்று மதியம் வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 25,000த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூரில் 199 நிவாரண மையங்களுக்கு 25,438 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நட்மா ‘Nadma’ எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மையம் அறிவித்துள்ளது.
கிளந்தானில் மட்டும் 4,228 குடும்பங்களைச் சேர்ந்த 14,006 பேர் வெளியேற்றப்பட்டனர். எட்டு மாவட்டங்களில் உள்ள 94 நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.
திரெங்கானுவில் ஏழு மாவட்டங்களிலுள்ள 134 நிவாரண மையங்களில் 2,913 குடும்பங்களைச் சேர்ந்த 10,643 பேர் தங்கியுள்ளனர். பகாங்கிலுள்ள 13 நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 784 பேராக குறைந்துள்ளது.
பகாங்கில் லிப்பிஸ், ரவுப் மற்றும் கேமரன் மலையும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கேமரன் மலையில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 17 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் வெளியேற்றப்பட்டனர்.