பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 19 – நாடு முழுவதும் உள்ள 35 லட்சத்து 60 ஆயிரம் பேர், அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு தளமான பாடுவில் பதிந்து கொண்டுள்ளனர்.
நேற்று பின்னிரவு மணி 11.59 வரையிலான நிலவரம் அதுவாகும்.
பாடுவின் அதிகாரப்பூர்வ முகநூலில் அந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, இதுவரை பாடுவில் தங்கள் விவரங்களை பதிந்து கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும், அந்த பதிவின் வாயிலாக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி இரண்டாம் தேதி அறிமுகம் கண்ட பாடு தரவுத் தளத்தின் கீழ், மிக அதிகமாக சிலாங்கூர், சரவாக் மற்றும் ஜோகூரை சேர்ந்தவர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.