Latestமலேசியா

35,000 ரிங்கிட் மிரட்டி பணம் பறித்த விவகாரம்; இன்ஸ்பெக்டரும் இதர எழுவரும் கைது

ஜோகூர் பாரு, பிப் 7 – 35 ,000 ரிங்கிட் மிரட்டி பணம் பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இதர எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்திருக்கிறார். அந்த எண்மரும் ஸ்ரீ ஆலம் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். திங்கட்கிழமை காலை மணி 9.32 அளவில் இது தொடர்பாக புகார் பெறப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குமார் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 384ஆவது விதியின் கீழ் இது தொடர்பான நடைபெற்று விசாரணை வருவதால் கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் வெள்ளிக்கிழமைவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை இன்னமும் நடைபெற்று வருவதால் இது குறித்து ஆருடங்கள் அல்லது கருத்துரைப்பதை தவிர்க்கும்படி பொதுமக்களை குமார் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!