கோலாலம்பூர், பிப் 7 – ஜோகூர் பாருவில் அண்மையில் இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி ஒருவன் தாய்லாந்திலிருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்டான். தங்களுக்கும் அண்டை நாட்டிற்குமிடையே தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதை ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் உறுதிப்படுத்தினார். அந்த சந்தேகப் பேர்வழி காலை மணி 11.30 அளவில் ஜோகூர் செனாய் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தவுடன் கைது செய்யப்பட்டதோடு இது தொர்பாக விரைவில் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என குமார் தெரிவித்தார்.
Check Also
Close