Latestஉலகம்

கம்போடியாவில், உறவினரின் பெண் பிள்ளையை படம் எடுத்த கணவரை; கத்தியால் குத்திய மனைவி கைது

கம்போடியா, நவம்பர் 21 – கம்போடியாவில், தனது உறவினரின் பெண் பிள்ளையை புகைப்படம் எடுத்த ஆடவர் ஒருவரை, அவரது மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவத்தில், வலது தோள்பட்டையில் கடும் காயங்களுக்கு இலக்கான அந்த 44 வயது ஆடவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு மணி எட்டுக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

தனது கணவர் பெண் பிள்ளையை புகைப்படம் எடுப்பதை கண்டு சினமடைந்த 39 வயது மனைவி, பெறாமையால் கத்தியை கொண்டு அவரை தாக்கியதாக நம்பப்படுகிறது.

அப்பெண் தற்போது விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!