சென்னை, பிப் 15 – தமிழ் திரைப்பட இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து திருடிய தேசிய விருதை ஒப்படைத்ததோடு அதற்காக மன்னிப்பு குறிப்பு ஒன்றையும் அவரது வீட்டில் வைத்தனர். மதுரை உசிலம்பட்டியில் உள்ள அந்த இயக்குனரின் வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு பிளாஸ்டிக் பேக்கில் அந்த விருதுகள் வைக்கப்பட்டிருந்தன. சார் எங்களை மன்னித்து விடுங்கள். உங்களது கடின உழைப்பு உங்களுக்கே சொந்தம் என அந்த மன்னிப்பு குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.
பிப்ரவரி 1ஆம்தேதி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையம் அவரது இரண்டு தேசிய விருதுகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். 2015 ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படத்திற்கான முதல் தேசிய விருதை மணிகண்டன் பெற்றார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி என்ற திரைப்படத்திற்கான தேசிய விருதையும் மணிகண்டன் பெற்றிருந்தார்.