ஷா அலாம் , பிப் 7 – கிள்ளான், கம்போங் புக்கிட் செராக்காவில் கொள்கலன் ஒன்று போதைப் பொருள் தயாரிக்கும் ஆய்வுக் கூடமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டுப்பிடித்ததோடு இரண்டு ஆடவர்களை கைது செய்தனர். போலீஸ் நடத்திய சோதனையின்போது 440 கிரேம் கிரிஸ்டல் மெத்தாம்பேத்தமின், திரவமய மெத்தாம்பேத்தமின் ஆகிய போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர்களில் 22 வயது உள்நாட்டு நபர் விநியோகிப்பாளராகவும் 37 வயது வெளிநாட்டு நபர் தொழிலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இதனிடையே சிலாங்கூர் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறை மேற்கொண்ட மூன்று நாள் ‘Op Tapis Khas SeMalaysia’ நடவடிக்கையில் 420 போதைப் பொருள் விநியோகிப்பாளர்களும் தேடப்பட்டு வந்த 20 பேரும் கைது செய்யப்பட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.
Check Also
Close